யாழ். மாவட்டம் தென்மராட்சி பிரதேசங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவிக்கையில்,
இதனால் எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதெனவும் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராமிய டெங்கு ஒழிப்புக் குழுக்களின் செயற்பாட்டை வலுப்படுத்தவும்இ பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தவும்இ நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அழித்துவிடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி